பக்கம்:பூ மணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 தங்கள் செய்வதாக உறுதி கூறினர்கள். பிரியும் சமயம் நீர்ப்படலம் எங்களுக்கிடையில் விெடை பரிமாறிக் கொண்டது. அவர்கள் சென்றுவிட்டார்கள். நான் ஓடிப் போய்ப் படுக்கையில் புரண்டு அழுது தீர்த்தேன். பாட்டி யும் அப்பாவும் கெஞ்சாக் குறையாக சமாதானப்படுத்தி என்னே உணவருந்தச் செய்தார்கள். கருத்தரித்திருந்த தால், அதிகம் உடம்பை அலட்டிக் கொள்ளக்கூடாதென்று வேறு பயம் காட்டினர்கள். குழந்தையின் இன்ப நினேவில் என் துயரத்தை அடக்கிக்கொண்டேன். குழந்தையின் பொருட்டல்லவா இன்று வரை என் உயிர் உடலில் ஊசலாடி நிற்கிறது? என் எதிர்காலத்தின் நம்பிக்கையின் பிடிப்பே என் கருவில் வளரும் குழந்தையே பல்லவா? 蜘 强 姿 . திருச்சி இருண்ட என் வாழ்வில் ஆசைக்கதிராக என் குலச் சுடர் பிறந்ததிலிருந்து என் உள்ளம் அடையும் ஆனந்தம் எனக்கே கூட ஒரு மாதிரிதான் இருக்கிறது. வார்த்தெடுத்த தங்கச்சிலே போலிருக்கும் என் மகளைப் பார்த்துப் போக வரும் அவ்வளவு பேரும் அதன் அழகில் மனதைப் பறி கொடுத்து விட்டுத்தான் போகின்றனர். குழந்தையைப் பற்றி எத்தனை விமரிசனங்கள்? என்னே அப்படியே உரித்து வைத்திருக்கிறதாம். குழந்தை பிறந்திருக்கும் முகூர்த்தத் தில் எப்படியும் தந்தையை ஒன்று கூட்டிச் சேர்த்துவிடும் என்று ஜோஸியம் வேறு சொல்கிருர்கள். இந்தக் கோலா கலக் காட்சியைப் பகிர்ந்து அனுபவிக்க அவர் மட்டும் இருந்திருந்தால்... அன்று மங்களம் அக்கா மாத்திரம் பிள்ளையைப் பார்த் துப் போக வந்திருந்தாள். தம்பியின் பிரிவில் மனம் மாறிப் போய்ப் படுத்த படுக்கையாகிவிட்ட தன் கணவனின் சங்க டத்தை அவள் வெளியிட்டதும் எனக்குக் குபிரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/169&oldid=835452" இலிருந்து மீள்விக்கப்பட்டது