பக்கம்:பூ மணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 தோற்றம் தந்த என் நெஞ்சில் பால் நிலவு படருவதைப் போன்ற பரவசமயக்கம் ரேகை விட்டது. நான் பழைய பூமாவாக அன்றுதான் உணரலானேன். ஆகா... பழைய பூமாவாகவே ஆகிவிடுவேனே? என் ஆசைக்கனவு வெற்றி காணுமா ? வெற்றி கிட்டுமா ? இந்தக் கனவு இல்லே யென்ருல் இந்நேரம் என் வாழ்க்கை எப்படி எப்படித் திரும்பியிருக்குமோ? என்ன ஆச்சரியம்...? விஜயாவின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே கடிதத்திற்குரியவளான அவள்-விஜயா நேரில் பிரசன்னமாவதைப் பார்த்த எனக்கு எவ்வளவு ஆனந்தமா யிருந்தது தெரியுமா? அவள் என்பால் கொண்டிருக்கும் அன்புக்குக் கைமாருக நான் என்ன செய்ய முடியும்? எங்கெங்கு வலேடோடச் சொல்லி அவள் அத்தான நச்சரித் தாளோ...இந்த எண்ணங்களுக்கு மட்டும் ஓய்விருக் காதோ? முதலில் என் குஞ்சை வாங்கி முத்தமிட்ட பிறகு என்னிடம் பேச வந்தாள். டைரக்டர் சந்திரமெளலி: ‘இவரு’க்கு நண்பராம். அவர்தான் அன்றிலிருந்து சம்ரட்சித்தாராம். இப்படிச் சொல்லிவிட்டு அவள் என்னிடம் ரகசியமாகச் சிலவற்றைக் கூறினுள் சந்திரமெளலி உடல் நலமின்மை யின்மையால் என் கணவரே அப்பதவியிலிருக்கிரு. ரென்றும், புதிய படமொன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்குப் புது முகங்கள் தேவை எனப் பத்திரிகைகளில் விளம்பரம் வந்திருப்பதாயும் கூறிள்ை. இச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள நான் தயாராக வேண்டுமாம். என்னே ஒரு நடிகையாக்க முனைந்தாள். அதற்கும் வேருெரு நட்சத்திரத்தின் உதவியையும் சம்பாதித்து வந்திருந்தாள். நான் நடிகையாவதற்கு எனக்கு ஆட்சேபணையில்லை. பள்ளிநாட்களில்தான் நாடகங்களில் நான் முக்கிய பாகங் கள் ஏற்று நடித்திருக்கிறேனே...ஆல்ை கொண்ட கணவன் முன் நான் அன்னியள் போலப் பேட்டிக்கு ஆயத்தமாவதா? பூ- 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/171&oldid=835458" இலிருந்து மீள்விக்கப்பட்டது