பக்கம்:பூ மணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 பூமா கிடைத்துவிட்டாள்; குழந்தை-என் குழந்தை யையும் இன்றே கண்டுவிடலாம். மல்லிகா! ஆம்; அவள் பெண்குலத் திலகம்; தியாகச் சுடர். வாழ்க்கையை இன்னும் கன்னியாகவே கழித்து விட்டிருக்கிருளே! ஆனல் நான் எண்ணும் விதம் என் பூமாவும் சம்மதித்துவிட்டால்... மல்லிகாவுக்கு நான் செய்த அச்சாரத்திற்கு அது ஒன்றே என்னுலான பிராயச்சித்தம்-மன்னிப்பு...என் பூமா சம் மதித்து விடுவாள். ஆகா!...” கடந்த கனவை நிண்வோட்டிப் பார்த்தான்; நடக்க விருக்கும் இன் பக்கனவையும் கனவோட்டிப் பார்த்தான். ஸ்டூடியோவிலிருந்து டைரக்டர் ராஜேந்திரன் பட மெடுக்கக் கதை கேட்டு மல்லிகாவுக்குத் தபால் அனுப்பிய தற்கு அவனது அந்தரங்க அபிமானமே காரணம். கதை கொண்டுவரும்போது, தன் இதயத்தைச் சமர்ப்பித்து மன் னிப்புக் கோரத் துடித்தது அவன் உணர்ந்த மனம். மல்லிகாவை அவன் ஆவல் பொங்கிக் குமிழியிட எதிர் நோக்கியிருந்தான். இந்த இன்ப முத்தாய்ப்பு அவனுள் வேர் விடுவதற்குள் எத்தனே நாட்கள்-எத்தகைய கோரப் புயல்-எப்பேர்ப்பட்ட பயங்கர வெறியாட்டம் எல்லாம் நேர்ந்துவிட்டிருக்கின்றன...? சுபம்’ போடும் இன்ப முடிவுக்கு துன்பம்தான் தொடக்க ஏடாகப் பிள்ளையார் சுழி போடவேண்டுமோ? இதுவேதான் வாழ்க்கைப் பாடப் புத்தகத்தின் பொதுவான சூத்திரமா? - அது மல்லிகாவின் போட்டோ படம். தன் முதற்காத லுக்குப் பாத்திரமாகவிருந்த படமும் அதுதான். கொள்ளே அழகு படத்தில் அப்பிவிட்டிருந்தது. அதே அழகை இன்றுதான் மல்லிகாவிடம்-அம்மையின் விளையாட்டுக்குத் தோழியான அதே மல்லிகாவிடம் அவளுல் காண முடிந்தது. அது அவளது உள்ளத்தின் அழகு-ஈடு சொல்ல முடியாத எழில் திரள் அது. இதை உணரத்தான் இத்தனை நாட்களின் அனுபவம், உணர்வு இவையெல்லாம் தேவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/179&oldid=835474" இலிருந்து மீள்விக்கப்பட்டது