பக்கம்:பூ மணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு : உலகம் சுழன்றது: ராஜேந்திரன் சிந்தனே பண்ணிக்கொண்டிருந்தான். காட்சிப் பொருள் கனவுப் பொருளாகிவிட்டது. தன்னே வீட்டில் சேர்ப்பித்துச் சென்ற அந்தக் கார் மறையும்வரை அவன் இமையோடு இமை சேர்க்காமல் அப்படியே உட் கார்ந்திருந்தான். அவன் நெஞ்சில், நினைவில் அச்சமயம் "பூங்குழலியும் அவள் தந்தை சந்திரசேகரனுமே சுழன்று கொண்டிருந்தார்கள். அவன் இதயத்தில் இன்ப ஊரல் கிளர்ந்தெழுந்தவாறிருந்தது. விழி சிமிட்டும் போதில் ராஜேந்திரன் தன் நினைவு மறந்தான்... அவனே அழைத்துப் போக வந்திருந்த கார் அழ கோவியம் பங்களாவிற்குள் நுழைந்தது. கதவைத் திறந்து கொண்டு ராஜேந்திரன் கீழிறங்கியதுதான் தாமதம், *வணக்கம்’ என்று இரு குரல்கள் ஒரே சமயத்தில் எதிரொலித்தன. பூங்குழலியும் அவள் தந்தையும் குரலுக் குரியவர்கள். ராஜேந்திரன் அவர்களுக்குப் பதில் வணக்கம் செலுத்தின்ை கைகூப்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/23&oldid=835516" இலிருந்து மீள்விக்கப்பட்டது