பக்கம்:பூ மணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று : நிசங்தானே, சொப்பனமோ ? "ராஜா, உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டு மென்றிருந்தேன். இன்றைக்கு ஒரு பெண்ணேப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. போன வருஷம் காலேஜ் விழாவில் நீ பெற்ற பரிசுகளேக் கண்டு அந்தப் பெண்ணின் அப்பா உன்னேயே தன் மருமகனக ஆக்கிக்கொள்ள விரும்புகிருர், உன் சம்மதம் சொல்; வரவழைக்கிறேன். பெண்ணேப் பார்க்கலாம். மனம் பொருந்தும் சம்பந்தம். மனம் பொருந்திச் சொல் முடிவை, ராஜா...?? தாய், பெற்ற பிள்ளேயிடம் வேண்டும் விண்ணப்பத்தில் இழையோடி நிற்கும் அன்பு வெள்ளம். பாசப்பிரளயம் எல்லாம் மங்களம் தன் மைத்துனனிடம் பேசிய பேச்சுக் களில் பேசாத பேச்சாகத் தடம் பதிந்திருந்தன. - அமர்ந்தது அமர்ந்தவாறே உட்கார்ந்திருந்த ராஜேந் திர னின் சிந்தனைப்புள் விரிந்த ககன வெளியில் பாதை வகுத்து, பண் இசைத்துப் பாடிப் பறந்தோடியது. எங்கோ ஒர் துருவத்தை நோக்கி, எதையோ ஒன்றை மையமிட்டு, ஏதோ ஒர் விளிம்பில் நின்றவாறு... அவன் அறிவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/33&oldid=835536" இலிருந்து மீள்விக்கப்பட்டது