பக்கம்:பூ மணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் அன்பை வழிபடுபவன். இது என் போக்குஇயல்பு-நினைவு! தயவுசெய்து மல்லிகாவை எனக்கு அளியுங்கள்! நாம் இருவரும் சிநேகிதர்களாகச் சந்திக்கும் பொன்னை சந்தர்ப்பத்தை அண்மையில் ஏற்படுத்துங்கள். -ராஜேந்திரன்.” ராஜேந்திரன் பூங்குழலிக்கு எழுதிய கடிதத்தை அன்றையத் தபாலில் சேர்த்துவிடச் செய்தான். சில கண நேரங்கழித்து வணக்கம்’ என்று இரு குரல்கள் ஒலிப்பதைக் கேட்ட ராஜேந்திரன் கண்களே எதிர் நிறுத்திப் பார்த்தான். அப்பொழுது வந்து நின்ற காரினின்றும் இறங்கிய பூங்குழலியும் டாக்டர் குணசீலனும் கைபிடித்த காதலர்கள் போலக் கைக்கோர்த்த வண்ணம் நகைமுகங் குலுங்க. வந்து கொண்டிருந்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/39&oldid=835546" இலிருந்து மீள்விக்கப்பட்டது