பக்கம்:பூ மணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜேந்திரன் . மல்லிகா சிரஞ்சீவி ராஜேந்திரன்-செளபாக்கியவதி மல்லிகா!' திருமணப் பத்திரிகையில் பொன் ரேக்கிட்டு அச்சாகி யிருந்த இந்த ஜோடிப் பெயர்களே மனத்திற்குள் படித்துப் பார்த்தான் ராஜேந்திரன். . தன் கன்னிக்கதை முதன் முதலில் பத்திரிகையில் வெளியாகியிருப்பதைக் காணும் எழுத்தாளன் எவ்வளவு பூரிப்பேறிப் போவான்? அம்மா’ என்ற முதல் சொல் தன் குழந்தையிடமிருந்து புறப்படுவதைக் கேட்கும் அன்னே யின் அகம் அடையும் ஆனந்தத்திற்கு அளிவேது? அதே மாதிரி ராஜேந்திரன் மனத்தில் மகிழ்ச்சி புதுப் புனலாகப் பொங்கிக் குமிழ் பரப்பிக் கிளம்பிக்கொண்டிருந்தது. புதுப் புனல் என்றலே அதன் பூ ரி ப் பி. ற் கும் மிதப்புக்கும் கேட்கவே தேவையில்லே. உள்ளத்து உவகை உதட்டுக் கோணத்தில் புன்னகையாக இழைந்திருந்தது. ஒரு .கனம் தன்னையும் மறந்தான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/61&oldid=835597" இலிருந்து மீள்விக்கப்பட்டது