பக்கம்:பூ மணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அழைப்பு அனுப்பப்பட வேண்டிய நண்பர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தான். ஒவ்வொன்ருக உறையில் விலாசமிட்டுக் கொண்டே வந்தான். வந்தவன் ஒன்றில் எழுதியிருந்து விலாசத்தைப் பார்த்து சில கணங் கள் வேலேக்கு ஒ விட்டு நிறுத்தினன். அந்தப் பெயசிை மீண்டும் உச்சரித்தான். சந்திரன்! அவன் ராஜேந்திர அக்கு உயிர் நண்பன், கல்லூரித் தோழமை. அவன் உருவத்தின் அருகே மற்றெரு பெண் உருவம் தோன்றியது. அது பூாே. இருவரையும் ஜோடியாகப் பார்த்தான்; வாழ்க்கையில் அவர்கள் இருவரையும் ஜோடியாக்கத் திட்டம் உருவாக்கினன். அவன் இதயத்தில் அமைதி கண்டது. பூங்குழலிக்கும் பூமாவுக்கும் அழைப்புகளே எழுதி நேரே கொண்டுபோய்க் கொடுத்தான். பத்திரிகையைப் பெற்றுக்கொண்டதும் பூமாவின் கண்கள் கலங்கிவிட்டன. கடைசியில் நகைமுகத்துடன் அவனுக்குக் கைகூப்பி விடை கொடுத்தனுப்பியதை அவன் மறக்கமாட்டான்! தென்றல் தவழும் மாலே. தென்றலத் துர்து விட்டு ஆசைக் கிளியை அழைக்கும் பாட்டை நினைத்துக் கொண்டே, கையில் சுற்றிய ராக்கெட் டுடன் விளேயாடச் சென்ருன் ராஜேந்திரன். - அப்பொழுது ராஜா என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்; அவன் அண்ணன் ஆனந்தன் பயமும் பீதியும் நிறைந்த முகத்துடன் விபர்க்க விறுவிறுக்க வாசற்படியில் நின்றிருந்தான். மறுகணம் அவன் மயங்கிக் கீழே விழுந் ததைக் கண்டதும், அண்ணு?’ என்று கூறியவாறு ராஜேந்திரன் அவ்விடத்தை நோக்கி ஒரே எட்டில் தாவிக் குதித்து ஒடிக் கொண்டிருந்தான். - - தொலேவில் வீசிக் கொண்டிருந்த இன்பத்தென்றல், கணத்திற்குள் பயங்கரப் புயலாக மாறி அவ்விடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது...! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/65&oldid=835605" இலிருந்து மீள்விக்கப்பட்டது