பக்கம்:பூ மணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது : சிவந்தது கன்னம்! கிலக்கண்ணுடியின் முன் தலைவரிப் பின்னிக் கொண்டு, பிறை நுதலுக்குப் பொட்டிட்டுக் கொண்டிருந் தாள் பூமா. பொற்குடத்திற்குப் பொட்டிட்டுப் பார்க்கவா வேண்டும்? - பூமா?? குரல் கேட்டதும் அவள் விரைந்து உள்ளே சென்ருள். மங்களம் ஏதோ பத்திரிகையொன்றைக் கையிலே பிரித்து வைத்தவாறு நின்றதைக் கண்ட பூமாவுக்குத் தன்னே அவள் கூப்பிட்டதன் காரணம் ஒருவாறு புரிந்தது. 'பூமா, உங்கள் கல்யாணப் போட்டோ வந்திருக் கிறதே, பார்!’’ என்று சொல்லி நிழற்படம் வெளியாகி யிருந்த இடத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினுள் மங்களம். படத்தைப் பார்த்த பூமாவிற்கு வெட்கம் வந்து கவ்விக்கொண்டது ; சிவந்த கன்னம் ரத்தச் சிவப்பாக மாறியது ; ஆனந்தம் மேலோங்க, நாணித் தலை கவிழ்ந் தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/74&oldid=835623" இலிருந்து மீள்விக்கப்பட்டது