பக்கம்:பூ மணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7{} மைதானத்தை அடைவதற்குச் சரியாகயிருக்கும்...?? என்று சொல்லி, அடுக்களேக்குள் நகர்ந்த மங்களத்தைப் பார்த்துக்கொண்டு நின்ருள் பூமா. அவளேயுமறியாமல் மங்களத்தின் பேரில் கணத்துக்குக் கணம் அன்பும் பாசமும் வளர்ந்து வருவதைப் பூமா நன்கு உணரலாள்ை; அவளு டைய உள் இதயம் உணர்த்திச் சொல்லியது; அவள் உணர்ந்தாள்; அவள் உணராமலேயே தன் போக்கில் அவனது இதயத்தின் உணர்வு அங்ங்னம் உணர்த்திக் காட்டியது. தன்மீது தனித்த ஈடுபாடு காண்பிக்கும் மங்களத்தைப் பற்றிய நல்லதொரு உயர்நோக்கம் நெஞ் சிலே உருவாகியிருந்தது. பூமாவிற்கு இதைப் பற்றி அளவு கடந்த பெருமையாகவும், பெருமிதமாகவும் இருந்தது. கன்னிமாடத்தில் உலவும் அரசிளங்குமரி போல தளர் நடையிட்டுச் சென்ருள் பூமா. கண் நொடிக்கும் நேரத்தில் வேற்றுடை உடுத்திக் கொண்டாள். ஜார்ஜெட் புடவை யும், ஆர்கன்டி வாயில் ஜம்பரும் அவளுக்கு கனகச்சித மாக அமைந்திருந்தன. பெட்டியும் பேழையும்போல, அவள் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ சிரித்துக் கொண் டிருந்தது. அழகே உருவாக நின்ற பூமாவைக் காண மங்களத் துக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. உயிர்ப்பினேப் புண்ட இவ்விருவரும் விதிவிலக்கு போலும் விலக்கு விதியாகத் தானே இவர்களின் உறவு முறையும் பின்னப் பட்டிருக்கிறது...! A நான்கைந்து வாரங்களுக்கு முன்னர் தன் மனம், அதைவிடத் தன் கணவரின் மனம் பட்ட பாட்டை நினைத் துப் பார்த்தாள் மங்களம். * - அது ஒரு கதை' - ராஜேந்திரன் மல்லிகாவை விரும்பவில்லே என்ற முடிவைத் தெரிவித்து, அதே இரவில் தன் அண்ணனுக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/76&oldid=835628" இலிருந்து மீள்விக்கப்பட்டது