பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போவதாக பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டுக்கொண்டி ருந்தன. ஆகையால் அண்ணுவை விடுதலைக்குப் பின்னர்கூட உடனடியாகப் பார்க்க முடியாது என்று நினைத்தேன். அண்ணு வருகை தர விரும்பியது எனது பொது வாழ்க்கைக்கு ஒரு நல்ல உத்தரவாதமாகவே எனக்குப்பட்டது.

அந்தக் கடிதத்தில் திரு. N.W. நடராசன் அவர்கள் எனது விடுதலைக்கு மறுநாள் அண்ணு அவர்கள் இராசபாளையம் வர இசைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒரு சிக்கல் இருப்பதாக எனக்குப்பட்டது. அதாவது விடுதலைக்கு மறுநாள் திருப்பத்துரிலும் மற்றும் சில ஊர்களிலும் பாராட்டுக் கூட்டம் நடத்த நண்பர் மாதவன் (M.L.A.) அவர்கள் ஏற்பாடு செய்தி ருந்தார். ஆகவே அன்றைய தினம் இராசபாளையம் போக வாய்ப்பிருக்காது. இதை எப்படிஅண்ணு அவர்களுக்கு தெரியப் படுத்துவது? நான் திகைத்துக் கொண்டிருக்கும் போது இன் ைெரு தகவல் கிடைத்தது. 9-6-65-ல் மதுரையில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அண்ணு வரப்போவதாக பத்திரி கையில் பார்த்தேன். -

9- 6 - 65

அண்ணு அவர்களின் கைக்குக் கிடைக்கும்படி ஒரு கடி தத்தை எழுதி கள்ள வழியாக அனுப்பினேன். காந்தியார், பண்டித நேருகூட கள்ள வழிகளில் கடிதங்களை அனுப்பியிருப்ப தாகப் படித்திருக்கிறேன். நான் என்ன சாமான்யன்தானே? கடிதம் கிடைக்கப்பெற்ற அண்ணு அவர்கள் விடுதலைக்கு மறு நாள் திருப்பத்துார் தாலுகாவுக்கும், அதற்கு அடுத்த நாள் இராசபாளையத்திற்கும் வர ஒப்புதல் அளித்து விட்டார்கள். வெளியில் இருக்கும்போது முயன்று வெற்றி பெருத காரியங்களெல்லாம் எனக்கு இப்போது நிறைவேறிக்கொண்டிருந்தன. சிறையிலேயே இருந்து விட்டால் என்ன என்று கூடத் தோன்றி யது. M.G.R., S S.R. இவர்களைப் பார்க்க சென்னைக்குப்போய். பலமுறை முயன்ருலும் அவர்கள் கிடைப்பதில்லை. ஆனல் அவர்கள் சிறையிலிருக்கும் என்னைப் பார்க்கப் பல மு ைற வந்தார்களே சிறை வாழ் க் கைக் கு எவ்வளவு பெருமை? அதுவும் மக்கள் நலனுக்காகச் சிறைக்குப் போனுல்தான் அந்தப் பெருமை கிடைக்கும். எல்லாம் தியாகம் நிறைந்த சிறை வாழ்க்கை ஆகிவிடுமா? காதலியின் எச்சலுக்கு மதிப்பு உண்டு எல்லோருடைய எ ச்ச லுக் கும் மதிப்பு ஏற்படுமா? தியாகத்திற்காக சிறை புகுவது காதலியின் எச்சலை விழுங்கு வதற்குச் சமம் தானே!! - . . . . . . . . . . . . . . .

$7