பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்கிளைஞ ரோடிந்த ஞாலமெலாம்

தமைப்போற்ற நயந்து பெற்ற 

அன்னநடை அரம்பைதனை அறிவுகுண

மிக்கோற்கே அளித்தி டாது 

பொன்னதிகம் ஈவோற்குப் பிறிதொன்றும்

பாராது புவியில் விற்கும் 

தன்மரபின் சால்பறியார் சார்நரகென்? -

வேலவனே! சாற்று வாயே.          (௧௭).

வீதிவிளை யாடிவரு மென்குதலை

மொழிமாறா மின்னை யொத்த

காதலுறு தம்மகளைக் காசினியெ

லாமறியக் கடனுக் காக

நீதியறி யாதுலகில் நீசர்களைப்

போல்விற்கும் நேர்மை யில்லாக்

காதகர்கள் விழ்நாகென் கருணைபுரி

வேலவனே! கழறு வாயே.          (கஅ)

பண்டுமக வீன்றதற்குப் பலர்க்குஞ்சர்க்

கரைபழங்கள் பண்பாய்த் தந்தும்

கண்டவுட னம்மகவைக் கனபிரிய

மொடுமடியிற் கவின வைத்தும்

கொண்டதையெ லாமறந்து கூர்த்தமதி

யில்லாதாட் கொல்லிப் பித்துக்

கொண்டவர்கள் போம்நரகென்? குன்றெரிந்த

வேலவனே! கூறு வாயே.           (க௯)