பக்கம்:பெண்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் நிலை 73

எழுந்திருக்கவேண்டும்? பன்றி பேசுவதோ, யோருக்குப் பாண்டியனுடன் புறப்படுவதோ உலகம் நகைக்கும் ஒரு செயல். அதற்கெல்லாம்.மேலாக, எங்கள் பெண் இனத்தைப் பழிக்கும் அப்பாவலர் செயல் அமைவதை நோக்கப் பிறநாட்டாரெல்லாம்.நமமைக் கண்டு அழுவதர் அன்றிச் சிரிப்பதா என்றுதானே ஏளனம் செய்வார்கள்? பெண் அறிவைப் பேதைமைப்படுத்தும் பேதைமை என்று நாட்டில் ஆடவர் உள்ளத்தில் குடி கொண்டதோ, அன்று முதலே. தமிழ் நாடு, அன்னியர் கையிற் சிக்குண்டு அவதிப்பட்டுத்தானே கிடக்கின்றது. அதேைலதானே இன்றைய சிர்திருத்தக் கவிஞர்,

'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே. எனக் கூறினர்? ".

பரத்தையர் குலம் உண்டாக்கப்பட்டதைப் பல் இடங்களில் அறிந்தோம். அப்படி அவர்களைத் தமக்குக் களியாட்ட்ப் பொருளாக் அமைத்த அதே சமுதாயத் தைச் சேர்ந்த ஒருவர் அப்பெண் இனத்தைப் பழிப்பது காணின் வருத்தம் மிகுகின்றது. .

செம்மையில் அறம்செய் யாதார். திரவியம்

(சிதற வேண்டி நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன்

. . . . . (படைத்த வாறே.' என்று அப்பரத்தையரில் ஒரு தாய் தன் மகளுக்குக் கூறுவதாக உள்ள அடிகள் எழுத்தாலாய அடிகளா! மயிர்க்கால் தோறும் மாட்டிவைத்து மல்லுக்கு இழுக்கும் கூரிய ஊசிகளல்லவோ அவைகள் கள்ளுக்கும் குதுக் கும் பெண்மையை ஒப்பிடும் பேடியரும் நாட்டில் வாழ்ந்து தானே இருக்கின்ற்னர் திருவள்ளுவர் இருமனப் பெண்டிர் ' எனச் செயல் வேறுபட்ட ஒரு சிலரைக் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/76&oldid=600926" இலிருந்து மீள்விக்கப்பட்டது