பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7


டம் அவ்விதம் நடந்துகொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத்தில் பிறவாப் பிள்ளை ' எனக் கொண்டிருந்தார். தமிழன் வரலாற்றில் முக்கிய கட்டம்

  நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலை 

வரைத்தான்.. இப்போது நான்' உள்ள வயதில் அவர் இருந்தார்--- நான் அவருடன் இணைந்தபோது; முப்பது ஆண்டு களுக்கு முன்பு.

  அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி 

வந்திருக்கிறார். . ' இந்த ஆண்டுகள்' தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். ' திடுக்கி வைக்கிறாரே | திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே!' என்று கூறியும், விட்டுவைக் கக்கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்! - நானே தீர்த்துக்கட்டுகிறேன்!' என்று மிரட்டியும் தமிழகத் துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். "ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர் மூலையில் நின்றாகிலும்; மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக்கண்டனர்; கொதித்தவர்கள் அடங் கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய் தோர் அக்கறை காட்டினர்; அவருடைய பேச்சோ! அது தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக்கொண்டு, கற் களை உருட்டிக்கொண்டு, காடுகளைக் கழனிவளம் பெறச் செய்துகொண்டு ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார். இங்கே பேசுகிறார், '