இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
10
அவர் வயது 89; ஆனால், போர்க்களத்திலேதான் நிற்
கின் றார்!
அந்தப் போரிலே ஒரு கட்டடத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாட்களைத்தான்
'வசந்தம்' என்றே குறிப்பிட்டேன்.
- வாழ்க பெரியார்!
மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக வாழ்ந்திருக்கவேண்டும், தமிழர் வாழ்வு நல்வாழ்
வாக அமைவதற்கு, பன்னெடுங்காலமாக இருந்துவரும் கேடுகள் களையப்படுவதற்கு அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் என்பதில் அய்ய மில்லை . . .
- வாழ்க பெரியார் 1”.
- (தந்தை பெரியார் 89-ம் ஆண்டு பிறந்தநாள்
விடுதலை' மலருக்கு எழுதிய கட்டுரை)
- -----------------
- பெரியாரும் காந்தியும்
- காந்தியார் பெரியாரின் மாளிகையிலே
தங்கியிருந்திருக்கிறார். காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு காந்தி' என்றே பெயர் வைத்திருக்கிறார். காந்தியார் படத்தைக் கொளுத்துவேன்---அரசியல் சட் டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் சொன்னாரென்றால் அவர் சொல்லும் கார wம் என்ன என்பதை காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். '
- (11-11-57ல் தமிழக சட்ட மன்றத்தில்)