பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
அறிவுப்புரட்சி கண்ட
எம் தலைவா வாழி!


"...நம்முடைய தனிப்பெருந்தலைவர் பெரியாரவர்

களுடைய 88--வது பிறந்த நாள் விழாவில், நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றி உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் முதல மைச்சரான பிறகு எனக்கு ஏதாவது ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது தான் அந்த பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால், உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்த வரையில் இடையில் சில நாள் இல்லாமலிருந்த பழைட - நிகழ்ச்சித்தானே தவிர, இது புதிதல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கி றேன், பெரியார் அவர்களுடைய 89---வது - பிறந்த நாள் விழாவானது இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டுவருவது இயற்கையானது.

'கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக எல்லாக்

கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத்தக்கதாக, தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் போற்றத் தக்க நிகழ்ச்சியாக இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கிற பல்லாயிரக் ' கணக்கான மக்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த மாபெரும் கூட்டத்தில் அமைதியாக இருந்தால் தான் இவ்விழாவிந்கு தனிச்சிறப்புத் தேடிக்கொடுத்த வர்களாவீர்கள்.

பெரியாருக்கு நன்றி செலுத்துவோம்
பெரியார் அவர்கள் இன்று 88-வது வயதில்

அடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற