பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

18

யார் அப்போது அவரை ஒத்த மூதாட்டிகளோடு பேசும் போது அடிக்கடி சொல்லுவார்கள். ஆறுமாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காஞ்சிக்குச் செல்கிற நேரங்களில், அவர்கள் என்னைப்பற்றி, மற்றவர்களிடம் சொல்லும்போது யாரோ ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய் விட்டான்ன்: பேசுவார்கள், அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில் ஆடி:சன்பேட்டையிலே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பெரியார் அவர்களுடைய பேச் சைக் கேட்.... பிறகு சொன்னார்கள், என்னைப்பார்த்து; 'நீ ஈரோட்டிலேயே இரு' என்று. இத்தனைக்கும் அவர் களுக்கு அதிகமாக படிப்பு அறிவு இல்லை . எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், துவக்கத்தில் அவர்க ளிடத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பலப்பல இருக்கின்றன; என்னுடைய வாழ்நாள் முழுதும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவை அவை. இப்போது எனக்குக் கிடைத்திருப்பது, இனி எனக்குக் கிடைக்கக் கூடியது என்று எந்தப் பட்டியலைக்காட்டினாலும் நான் ஏற்கனவே பெற்றிருந்ததைவிட இவையெதுவும் மகிழ்ச் சியிலோ, பெருமையிலோ நிச்சயமாக அது அதிகமான தாக இருக்க முடியாது.

நீதிக்கட்சியின் தலைமையும்
சு. ம. இயக்கத்தின் வெற்றியும்
அவரிடத்திலே. அப்போது, ஓடாது என்ற காரணத்

தால் 'தரப்பட்ட ஒரு ஃபோர்டு மோட்டார் இருந்தது. அதிலேதான் நானும், அவரும் ஏறிக்கொண்டுசெல்வோம். ஏறிக்கொண்டு செல்வோம் என்று சொல்வதற்குக் கார ணம் அது பலநேரத்தில் ஓடாது; பிடித்துத் தள்ள வேண் டும். அந்த மோட்டாரில் கிளம்பிய நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி அடியோடு தரைமட்டமாக்கப்பட்ட நேரம். இனி, காங்கிரசுக்கு எதிராக வேறு மாற்றுக் கட்சி உண்' டாகவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்ட பொழுது; நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இரண்டே வடத்தில் அந்த நீதிக்கட்சி என்ற அரசியல் இயந்திரத்தை சுயமரியாதை இயக்கம் என்ற