இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பஞ்சாங்கம் பார்த்தெதையும் செய்ய வேண்டாம்
பார்ப்பனனை அய்யரென்று சொல்ல வேண்டாம்
பாவமென்றும் புண்ணியமென்றும் பார்க்க வேண்டாம்
பரலோகம் செல்லவழி தேட வேண்டாம்
ஏழுஜென்மம் உண்டென்று எண்ண வேண்டாம்
எண்ணியவர் யாருமில்லை நம்ப வேண்டாம்
எத்தர்களின் புரட்டையெல்லாம் எடுத்துரைத்தோன்
எம் தந்தை பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!