பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் வாழ்விலே பார்த்தான். மக்கள் கடமாட்டமே இல்லை. பயம் அதிகமாகிவிட்டது. அதே சமயத்தில், எதிரே புலி வருவது போலவும், அது தன் வாயைப் பிளந்து அப்படியே அவனைக் கடித்து விழுங்கி விடுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அவ்வளவுதான்; ஐயோ! புலி புலி!” என்று கதறிக்கொண்டே வீட்டை கோக்கி ஓட்டம் பிடித்தான்! மேல் முச்சுக் கீழ் முச்சு வாங்க, வீட்டை அடைந்தான்; அம்மாவிடம் கடந்ததைக் கூறி அழுதான். அம்மா அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினுள். "ஒரு காரியத்தை கினைப்பது எளிது; ஆனல், அதைச் செய்து முடிப்பது எளிதன்று என்பதை அப்போதுதான் அந்தச் சிறுவன் உணர்ந்தான். புலியைத் தேடிப் புறப்பட்டுக் கிலி பிடித்து ஓடி வந்தானே, அதே சிறுவன் குதிரை ஒட்டுவதில் மிகவும் கெட்டிக்காரகை இருந்தான். ஐந்தாவது வயதிலிருந்தே அந்தப் பழக்கம் அவனுக்கு இருந்தது. அவனுடைய அப்பா, அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்திருந்தார். தினந்தோறும் அச்சிறுவன் அந்தக் குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றி வருவான். அன்று பரத்பூர் குதிரைப் பந்தய மைதானத்தில் ஏராளமான கூ ட் ட ம் கூடியது. பக்தயக் குதிரைகள் புறப்படுவதற்குத் தயாராக கின்றன.