பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔8 பெரியோர் வாழ்விலே செடிகள் வளர வளர சரோஜனியின் ஆனந்த மும் வளர்ந்துகொண்டே வந்தது. அவர் தினமும், அதிகாலையில் எழுந்ததும், தாம் வளர்த்த செடி களைப் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைவார். ஒருநாள் சரோஜனி வழக்கம்போல் எழுந்து அந்தச் செடிகளைக் காணச் சென்ருர். சில செடி களில் மொக்குகள் அரும்பி யிருந்தன. அவற். றைப் பார்த்ததும், சரோஜனிக்குச் சொல்ல முடி யாத ஆனந்தம். கான் வைத்த செடிகளில் மலர்களைக் காணப் போகின்றேன். இனி காடோறும் மலர்களைக் கண்டு மகிழலாம்; அவற்றின் மணத்தை நுகர்ந்து இன்பம் பெறலாம்” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்தார் சிறை அதிகாரி. "அம்மா, உங்களுக்கு இன்று விடுதலை. வெளியேற லாம்” என்ருர். இதைக் கேட்டதும், சரோஜனி திடுக்கிட்டார். "என்ன எனக்கு விடுதலையா? இப்போது அது வேண்டாம். இன்னும் ஒருவாரம் இங்கேயே நான் தங்கிவிட்டுப் போகிறேன். என் அருமைச் செடி களில் பூக்கும் மலர்களைக் கண்டு இன்பம் பெற ஒரு வாரமாவது வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டார். ஆணுல், பயனில்லை. விடுதலையானவரை எப்படி அங்கேயே வைத்திருப்பது? கன்றைப் பிரியும் பசுவைப் போல் கலக்கத்துடன் வெளியேறினர், சரோஜனி தேவி.