பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக் கையிலே சூடுபோட்டுக் கொண்டவர் 35 மனைவி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குவளை கிறையப் பால் கொண்டுவந்து கொடுப்பாள். அன்று ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டே வந்தாள். இறுதியாகப் படேலுக்குக் கொடுக்க மட்டும் பால் இல்லை. என்ன காரணத்தாலோ, அன்று பால் குறைந்துவிட்டது. வேறு வழியில் லாததால் அவள் பேசாமல் இருந்துவிட்டாள். படேல் பால் சாப்பிடவில்லை என்பதை ஆசிரியர் தெரிந்துகொண்டு விட்டார். உடனே அவர் தம் மனைவியைப் பார்த்து, படேலுக்கு ஏன் பால் கொடுக்கவில்லை?” என்று கேட்டார். . 'பால் என்ருல் படேலுக்கு அவ்வளவாகப் பிடிப் பதில்லை’ என்று ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வைத் தாள் அந்த அம்மாள். - படேல் . அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டு தான் படுத்திருந்தார். அப்போது அவர் துரங்க வில்லை! மறுநாள், ஆசிரியரின் மனைவி முன்போல் பால் கொண்டுவந்து கொடுத்ததும், வேண்டாம். எனக்குப் பால் பிடிக்காது!’ என்று கூறிவிட்டார் படேல். அக்த அம்மாள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த் தாள்; கொஞ்சிப் பார்த்தாள். ஊஹூம்...ஒன்றும் பலிக்கவில்லை! அன்றிலிருந்து படேல் அந்த ஆசிரியர் வீட்டில் தங்கியிருக்கும்வரை ஒரு தடவைகூடப்பால் அருந்தவில்லை! அவருடைய பிடிவாதத்தைக் கண்டு அந்த அம்மாளே ஆச்சரியப்பட்டாள்! 酸 戏 球 总数 $or to 8% או