பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரியோர் வாழ்விலே அக்த மணியக்காரர் முன்னுக்குப்பின் முரணுக உளறுவதைக் கண்டதும், போலீஸார் பயந்து போயினர். வெள்ளேக்கார மாஜிஸ்ட்ரேட்டும் போலீஸாருக்குச் சாதகம் செய்ய கினைத்தார். உடனே, "நீர் முதலில் வந்த ஏழு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவில்லை. இவரை மட்டும் விசாரணை செய்கிறீரே, ஏன்? ஏன்று கோபமாய்க் கேட்டார். உடனே படேல், அது என் விருப்பம்’ என்ருர். இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட், "என்ன, உமது விருப்பமா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

  • சந்தேகமென்ன? இதை வழக்கு மன்றம் மறுக்க முடியாது. இங்கு கடப்பது வழக்கே அல்ல; வெறும் நாடகம். போலீஸாரே இந்த நாடகத்தைத் தயாரித்திருக்கிருர்கள். மடாதிபதியை உடனே விடுதலை செய்ய வேண்டும். பொய் கூறிய சாட்சி களே உடனே கைது செய்ய வேண்டும். இல்லா விடில் நான் விடப்போவதில்லை. மேல்கோர்ட்டிலே இதே வழக்கை கடத்தி உண்மையை அம்பலப் படுத்துவேன். அப்போது தாங்களும் அங்கு வந்து கிற்கவேண்டியிருக்கும்’ எ ன் று அடித்துப் பேசினர் படேல்.

இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட்டும் போலிஸாரும் பதைபதைத்துப் போயினர். முடிவு? அன்றே மடாதிபதிக்கு விடுதலை கிடைத்தது!