பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●● பெரியோர் வாழ்விலே அது மிகவும் கயமாக அமைந்திருப்பதுபோல் அவ னுக்குத் தோன்றியது. இந்தப் பாட்டை நாம் யாரிடமாவது காட்ட வேண்டும். அவர்களுடைய கருத்தை அறிய வேண்டும்’ என்று கினைத்தான். ஆல்ை, பிறரிடத்தில் காட்டுவதற்கு அவனுக் குக் கூச்சம்; காட்டாமல் இருக்கவும் மனமில்ஜல. சிறிதுநேரம் சிந்தித்தான்; இறுதியில், ஒரு முடி வுக்கு வந்தான். . அதன்படி, மறுகாள் மிகவும் சீக்கிரமாக . அதா வது எல்லோருக்கும் முன்பாகப் பள்ளிக்குச் சென் ருன்; தான் இயற்றிய பாட்டை ஒரு தாளில் எழுதி ன்ை ஆசிரியர் உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்துவிட்டுத் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். சிறிதுநேரம் சென்று மற்ருெரு மாணவன் அங்கு வந்தான். அவன் தரையில் காகிதத்தில் ஏதோ எழுதிக் கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்தான்; படித்தான்; பிறகு, தமிழாசிரியரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுத்தான். - தமிழாசிரியர் பாட்டைப் படித்துப் பார்த்தார். 'அடடா இந்தப் பாடல் எவ்வளவு அழகாயிருக் கிறது! இதை இயற்றிய கவிஞர் யார்?பெயர் போட வில்லையே!” என்று சொல்லிவிட்டுத் திரும்பத் திரும்ப அதைப் பாடி மகிழ்ந்தார்; மாணவர் களுக்கும் அதைப் பாடிக் காட்டினர்; பாட்டில் உள்ள சொல் அழகையும் பொருள் அழகையும் எடுத்துக் கூறினர். , .