பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీడీ பெரியோர் வாழ்விலே அப்படி யிருக்கும்போது, தக்தியை வாங்கியதும் உடனே பரபரப்புடன் பிரித்துப் பார்த்திருக்க வேண்டாமோ ? பார்க்கவில்லை, கமது கவிமணி. ஏன் ? "இதில் ஏதேனும் துன்பச் செய்தி இருக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருக்குமோ ? அதைப் படித்ததும், கிச்சயம் நமக்குக் கலக்கம் ஏற்படும். மற்றவர்களும் செய்தியை அறிந்துகொண்டுவிடு வார்கள். மகிழ்ச்சியோடு எல்லோரும் சாப்பிடப் போகிருர்கள். இப்போது இந்தத் தந்தியை வெளி பிட்டால் எல்லோரும் வருந்துவார்கள். விழாவும் அமங்கலமாக முடியும் என்று எண்ணியே தந்தி யைப் பிரித்துப் பார்க்காமல் வைத்திருக்தார். 'தந்தியில் என்ன இருக்குமோ ! ஏது இருக் குமோ !” என்று உள்ளுர அவர் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆயினும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. - - மாலை கேரம் விழா முடிந்து எல்லோரும் அவ ரவர் வீடு சென்றனர். எல்லோரும் சென்ற பிறகு, கவிமணி அந்தத் தக்தியை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தார்; உடனே திடுக்கிட்டார்; கண் கலங்கினர். - 'தங்கள் மருமகள் இறந்துவிட்டாள். உடனே புறப்பட்டு வரவேண்டும் என்று அந்தத் தந்தியில் இருந்தது! உடனே அங்கிருந்து பறப்பட்டு விட்டார், கவி மணி. அந்த அவசரத்தில் மனைவியிடம்கூட அவர் செய்தியைச் சொல்லவில்லை! -