பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரியோர் வாழ்விலே வெவ்வேறு விதமாக கடத்தப்படுவார்கள். சிலர், வந்ததும் அங்கிருக்கும் ஆடம்பரமான நாற்காலி யில் உட்காருவார்கள். சிலர் தரையிலே உட்காரு வார்கள். சிலர் கால் கடுக்க அப்பாவின் முன் கின்றுகொண்டே பேசுவார்கள். சிலர் வீட்டுக்குள் வராமல் வெளியிலேயே கைகட்டி நிற்பார்கள். "ஏன் இந்த வேற்றுமையெல்லாம்?’ என்று சிறு பையனுன விவேகானந்தருக்குப் புரியவில்லை. ‘இவர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். அவனைத் தொடக் கூடாது' என்று ஒரு சமயம் அவரிடம் ஒருவர் கூறினர். - 'ஏன், தொட்டால் என்ன? குடி முழுகிப்போய் விடுமா ? அல்லது, செத்துப்போய் விடுவோமா ? கான் இப்படிப்பட்ட எத்தனையோ பேர்களைத் தொட்டிருக்கிறேனே அவர்கள் கொடுத்த தின் பண்டங்களையும் வாங்கித் தின்றிருக்கிறேனே ! நான் செத்தா போய்விட்டேன்? இன்னும் உயிருடன்தானே இருக்கிறேன்!” என்று விவேகா னக்தர் கூறிச் சிரித்தார். 'ஜாதி வேற்றுமை கூடாது என்று அந்தச் சிறு வயதிலேயே அவர் கினைத்தார். கினைத்ததைக் கடைசிவரை பேசிவந்தார்; எழுதியும் வந்தார். ○ ఢి శఙ భ3 •". . . விவேகானந்தர் மாணவராக இருக்கும்போதே அற்புதமாக வீணை வாசிப்பார்; அருமையாக மிருதங்கம் வாசிப்பார்; இனிமையான குரலில் இசையோடு பாடுவார். அவற்றுடன் சிலம்ப விளையாட்டிலும் தீரராக விளங்கினர்!