பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர் ! 5 § ஒரு சமயம் சிலம்ப வித்தையில் கெட்டிக்கார னை ஒருவன் வந்தான். அவன் வயதில் பெரியவன். பல இடங்களில் வெற்றிபெற்றவன். அவனை எதிர்த்து விளையாட விவேகானந்தர் முன் வந்தார். சிலருக்கு இது வியப்பாக இருந்தது. இவனே சிறுபையன்! போதிய அனுபவமும் இல்லாதவன். இவன் அந்த முரடனுடன் சண்டைக்குப் போகி ருனே! என்று கூறி அவர்கள் வியந்தார்கள். பலர் கேலி செய்தனர். ஆளைப் பார்த்தால் ஆழாக்குப் போல் இருக்கிருன். இவனுவது, அம்மல்லனுடன் சிலம்பம் விளையாடுவதாவது: எங்காவது கையைக் காலை ஒடித்துக் கொள்ளப் போகிருன்” என்று கூறி அவர்கள் கேலி செய் தனர். விவேகானந்தர் தயங்கவில்லை. வீரமாக அவனுடன் சிலம்பம் விளையாடினர். இருவரும் நெடுநேரம் வெகு மும்முரமாக விளையாடினர்கள். விவேகானந்தரின் ஆட்டத்தைப் பார்த்த எல் லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவரது: திறமையையும், நுட்பமதியையும் பாராட்டினர் கள். ஊம், விடாதே!......சபாஷ்!......' என்றெல் லாம் ஊக்க மூட்ட ஆரம்பித்தார்கள். கடைசியில் விவேகானந்தாே வெற்றி பெற்ருர் : சதாரணமாக வெற்றி பெறவில்லை; எதிரியின் சிலம்பத் தடியைச் சின்ன பின்னமாக உடை த் தெறிந்துச் வெற்றிபெற்றர் f 爱、 洛 & 冷领》 领 冷 ஆ இ விவேகானந்தர் சிறுவனக இருந்தபோது அவரு டைய நண்பன் ஒருவனின் வீட்டுக்கு அடிக்கடி