பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரியோர் வாழ்விலே இந்தச் செய்தி எப்படியோ பள்ளித் தலைவர் கோவிந்த பாபுவுக்கு எட்டியது. உடனே அவர் தாகூரை அழைத்தார். ஒரு விஷயத்தைக் கொடுத்து, அதைப் பற்றிப் பாட்டு எழுதச் சொன்னுர், தாகூர் மிகவும் அழகான பாட் டொன்றை எழுதினர். எல்லோருக்கும் படித்துக் காட்டினர். அதைக் கேட்டு எல்லோரும் ஆ!’ என்று வாயைப் பிளந்தனர். இந்த விஷயம் அப்பாவின் காதிலும் விழுந்தது. அவர் மிகவும் பெருமைப்பட்டார். அன்று முதல் அவர் தாகூரின் பாடல்களை அடிக்கடி கேட்டு மகிழ்வார்; தாகூரை மிகவும் பாராட்டுவார். அப்பா மட்டுமென்ன; தாகூரின் குடும்பத்தார் எல்லோருமே அவரைப் பாராட்டுவார்கள். ஆனல், ஒரே ஒருத்தி மட்டும், 'ப்பூ இது என்ன பாட்டா! உனக்கு அவரைப்போல் எழுதத் தெரியவில்லையே! இவரைப்போல் எழுதத் தெரியவில்லையே!” என்று குத்தலாகக் கூறுவாள். அவள் யார் தெரியுமா? தாகூரின் அண்ணிதான் ! - அண்ணி கூறுவதைக் கேட்டுத் தாகூர் கவலைப் படமாட்டார். அண்ணி எப்போதுமே அப்படித் தான். தாகூருடன் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பது அவளுக்கு வழக்கம். -

  • - * * ş 3

தாகூரின் அண்ணிக்குக் கிளி, மைனு, அணில் முதலியவற்றை வளர்ப்பதில் அளவில்லாத விருப் பம் உண்டு. வீட்டில் அவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வளர்த்து வருவாள். ஒருகாள், அவள் இரண்டு அணிற்பிள்ளைகளை வாங்கினுள். அவற்றைக் கூண்டிலே போட்டு