பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 13 யார்? முறையாகக் கூறுக’ என்றான். உடனே சேக்கிழார் தில்லைப்பிரான் அடியெடுத்துத் தரச் சுந்தரர் பதினொரு திருப்பாட்டாக அடியவரைப் பற்றித் தொகை பாடினார். அதனைத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் விளக்கிக் கூற, அவர் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திரு அந்தாதி என்றொரு நூல் பாடினர். அந்நூலைத் திருமுறைகண்ட இராசராச தேவர் முதலியோர் பாராட்டினார்’ என்றார். அதுகேட்ட சோழன் மகிழ்ந்து அவ்வடியார் வரலாற்றைக் கூறுக’ என்றான். சேக்கிழார் அடியார் வரலாறுகளைத் தொகை, வகைகளைக் கொண்டு விளங்கவுரைத்தார். கேட்டு மகிழ்ந்த மன்னன், இவ்வரலாறுகளைப் பெரியதோர் காவியமாக நீரே பாடியருள்க’ என்று அவருக்கு வேண்டிய ஆள் உதவி பொருள் உதவி தந்து தில்லைக்கு அனுப்பினான். “தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தப் பெருமான் திருமுன் நின்று. ‘அடியேன், புகழ்பெற்ற உம் அடியார் சிறப்பை எங்ங்னம் உரைப்பேன் எனக்கு அடி எடுத்து உதவி அருள்க’ என்று வேண்டினார். அவ்வமையம் 'உலகெலாம் என்ற சொல் சேக்கிழார் செவியிற்பட்டது. அவர் அதனையே புராணத்திற்கு முதலாகக் கொண்டு பாடி, புராணத்தை முடித்தார். அரசன் தில்லை அடைந்தான். தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் பெருஞ்சைவர் கூட்டத்தில் சேக்கிழார் தமது புராணத்தை அரங்கேற்றம் செய்தார். இறுதியில் அரசனால் பெருஞ்சிறப்புப் பெற்றார்: தொண்டர் சீர் பரவுவார் என்ற பெயரும் பெற்றார். "அரசன், சிறந்த பக்திமானாகிய சேக்கிழாரைத் தன்கீழ் வேலையில் வைக்க விரும்பாமல், அவர் தம்பி பாலறாவாயரைத் தொண்டைமான்’ என்ற பட்டத்துடன் தொண்டை நாட்டை ஆளும்படி விடுத்தான். அவர், 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமாள்' எனப்பெயர் பெற்றார். “பின்னர்ச் சேக்கிழார் தில்லையில் தங்கிக் கூத்தப் பெருமானைச் சேவித்துக் கொண்டிருந்து முத்தி பெற்றார். சேக்கிழார் மரபினர் இன்றுவரை அரசியல் உயர் அலுவலாளராக இருந்து வருகின்றனர். இனியும் இருப்பர்.” இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி இவ்வரலாற்றில் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளே கூறப்பட்டுள்ளன. ஆயின், சில ஆராய்ச்சிக்கு உரியனவாகவும் உள்ளன. ஆதலின், அவற்றை முறையே ஆராய்தல் நமது கடமையாகும். 1. சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பொறாத சேக்கிழார் அதனைத் திருட்டுச் சமணர் பொய்ந்நூல் எனக் கூறியதற்கும், சிந்தாமணிக்கு மாறாக இவர் பெரிய புராணம் செய்தார் என்று கூறியிருத்தற்கும், சேக்கிழார் புராணச் செய்யுளைத் தவிர வேறு சான்றில்லை. சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலும் இதற்கு அகச்சான்று இல்லை. ஆயின், இதற்கு மாறாகச்