பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் ஒடும் ஆமையாகிய அடுப்பில் ஏற்றிவைத்துச் செவ்வாம் பல் மலராகிய நெருப்பைத் தங்களுடைய வாய்களால் ஊதுபவர்கள் வயலில் பணிபுரிபவர்களும் ஆகிய இழிகுலப் பெண்களாகிய பள்ளிகளினுடைய சிறிய பெண் குழந்தைகள் புரியும் விளையாட்டு அந்த வயல்களினுடைய வரப்புக்கள் எல்லாவற்றிலும் காணப்படும். பாடல் வருமாறு:

'கயல்பாய்பைக் தடநந்துான் கழிந்தபெரும் கருங்குழிசி

வியல்வாய்வெள் வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.’’

கயல்-கயல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். பாய்நீரிலிருந்து துள்ளிப் பாயும். டைம்-பச்சை நிறமான நீர் நிரம்பிய, தடம்-தடாகத்தில் வாழும். நந்து-சங்குப் பூச்சிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம்.ஊன்-மாமிசம். கழிந்த-அற்ற. பெரும்-பெரிய கரும்-கருமையான. குழிசி-பானைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். வியல் -அகலமான வாய்-வாய்களில் ஒருமை பன்மை மயக்கம், வெள்-வெள்ளை நிறத்தைக் கொண்ட வளை-சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தரளம்-முத்துக்களாகிய அரிசிகளை ஒருமை பன்மை மயக்கம்.மலர்-மலர்களில் நிரம்பியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வேரி-தேனாகிய. உலை-உலையில். பெய்துஇட்டு. அங்கு-அந்த வயல்களின் அயல்-பக்கத்தில்.ஒடும். ஆமை.ஆமைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். அடுப்புஅடுப்புக்களில்; ஒருமை புன்மை மயக்கம். ஏற்றி-ஏற்றி வைத்து. அரக்காம்பல் - செவ்வாம்பல் மலர்களாகிய; ஒருமை பன்மை மயக்கம். நெருப்பு-தியை. ஊதும்-தங்க ளுடைய வாய்களால் ஊதும். வயல்-வயல்களில் பணிபுரி யும்; ஒருமை பன்மை மயக்கம். மாதர்-விருப்பம் மருவிய இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள் ஈன்றெடுத்த; ஒருமை

பெ-12