தில் ஒடும் ஆமையாகிய அடுப்பில் ஏற்றிவைத்துச் செவ்வாம் பல் மலராகிய நெருப்பைத் தங்களுடைய வாய்களால் ஊதுபவர்கள் வயலில் பணிபுரிபவர்களும் ஆகிய இழிகுலப் பெண்களாகிய பள்ளிகளினுடைய சிறிய பெண் குழந்தைகள் புரியும் விளையாட்டு அந்த வயல்களினுடைய வரப்புக்கள் எல்லாவற்றிலும் காணப்படும். பாடல் வருமாறு:
'கயல்பாய்பைக் தடநந்துான் கழிந்தபெரும் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.’’
கயல்-கயல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். பாய்நீரிலிருந்து துள்ளிப் பாயும். டைம்-பச்சை நிறமான நீர் நிரம்பிய, தடம்-தடாகத்தில் வாழும். நந்து-சங்குப் பூச்சிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம்.ஊன்-மாமிசம். கழிந்த-அற்ற. பெரும்-பெரிய கரும்-கருமையான. குழிசி-பானைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். வியல் -அகலமான வாய்-வாய்களில் ஒருமை பன்மை மயக்கம், வெள்-வெள்ளை நிறத்தைக் கொண்ட வளை-சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தரளம்-முத்துக்களாகிய அரிசிகளை ஒருமை பன்மை மயக்கம்.மலர்-மலர்களில் நிரம்பியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வேரி-தேனாகிய. உலை-உலையில். பெய்துஇட்டு. அங்கு-அந்த வயல்களின் அயல்-பக்கத்தில்.ஒடும். ஆமை.ஆமைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். அடுப்புஅடுப்புக்களில்; ஒருமை புன்மை மயக்கம். ஏற்றி-ஏற்றி வைத்து. அரக்காம்பல் - செவ்வாம்பல் மலர்களாகிய; ஒருமை பன்மை மயக்கம். நெருப்பு-தியை. ஊதும்-தங்க ளுடைய வாய்களால் ஊதும். வயல்-வயல்களில் பணிபுரி யும்; ஒருமை பன்மை மயக்கம். மாதர்-விருப்பம் மருவிய இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள் ஈன்றெடுத்த; ஒருமை
பெ-12