பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 16]

காழி-சீகாழியில். வரும்-திருவவதாரம் செய்தருளி வரும். பெரும்.பெருமையையும். தகையார்-தகுதியையும் பெற்ற வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. கையில்-திருக்கரங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வரும்வந்து சேர்ந்திருக்கும். திரு.அழகிய த்: சந்தி. தாள-தங்கத் தாளமாகிய, க்: சந்தி. கருவி-இசைக் கருவியை. கண்டு. பார்த்து. வாழிய:அசைநிலை. தம்-தம்முடைய..திரு-அழகிய. முடிமேல்-தலையின் மேல். கொண்டருளி-வைத்துக் கொண் டருளி. மனம்-தம்முடைய திருவுள்ளம். களிப்ப-மகிழ்ச்சியை அடைய. மதுர-இனிமையாக உள்ள வார்த்தைகளை அருளிச் செய்யும்; ஆகுபெயர். வாயில்-தம்முடைய திருவாயில். ஏழிசையும்-ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்கள் அமைந்த சங்கீதமும். இசை: ஒருமை பன்மை மயக்கம். தழைத்து-தழைப்பை அடைந்து. ஓங்க-ஓங்கி நிற்க. இன் னிசை- இனிய பண் அமைந்த வண்-சொற் சுவை, பொருட் சுவை என்னும் வளப்பம். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, ப்: சந்தி. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. எய்தஅந்தச் சத்தபுரீசரை அடையுமாறு. ப்: சந்தி. பாடி-பாடி யருளி. த்: சந்தி. தாழும்-தொங்கும்.மணி-மாணிக்கங்களால் செய்யப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி.குழை யார்-குழைகளைத் தம்முடைய செவிகளில் அணிந்தவராகிய சத்தபுரீசருடைய குழை:ஒருமை பன்மை மயக்கம். முன்-சந் நிதியில் நின்று கொண்டு. தக்க-அந்தத் திருப்பதிகத்திற்கு ஏற்றபடி உள்ள.திருக்கடைக் காப்பு-அழகிய இறுதிப் பாசுரத் தில் தம்முடைய திருநாமத்தை வைத்துப் பாடியருளிச்சந்தி. சாத்தி-சத்தபுரீசருக்கு அணிந்து விட்டு. நின்றார்-அந்த நாயனார் அந்தத் திருக்கோயிலில் நின்று கொண்டிருந்தார்.

அந்த இறுதிப் பாசுரம் தக்கராகப்பன் அமைந்தது. அது வருமாறு:

நலம்கொள் காழி ஞானசம் பந்தன் குலம்கொள் கோலக் காவு ளானையே

பெ-10-11