பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 199:

திருப்பவராகிய வேதார ணியேசுவரர். வெண்காடு-திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவெண் காட் டிற்கு. ஆரும்-தம்முடைய திருவுள் ளத் தில் நிரம்பியிருக்கும். மெய்-உண்மையான. க்: சந்தி, காதலோடும்-விருப்பத் தோ டு ம். பணிவதற்கு-அந்த வேதாரணியேசுவரரை வணங்குவதற்காக. அணைந்தார்-அந்த நாயனார் வேதார ணிையத்தை அடைந்தார். அன்று. ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.

பிறகு வரும் 124-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'தங்கத்தைப் போன்ற இதழ்களைப் பெற்ற கொன்றை மலர் மாலையும், வன்னி பத்திரமும், கங்கையாற்றின் நீரும், இளம் பருவத்தைப் பெற்ற பிறைச்சந்திரனும் நெடுங்கால மாகத் தங்கியுள்ள தலையைப் பெற்றவராகிய வேதாரணி யேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவெண் காட்டில் வாழும் திருத்தொண்டர்கள் அந்தத் திருஞான சம்பந்த மூர்ததி நாயனாருக்கு எதிரில் போய் அந்த இடத்தில் இததகைய மனப்பான்மையை உடைய வர்கள் ஆனார்கள் என்று கூற முடியாத பெரிய மகிழ்ச்சி தங்களுடைய திருவுள்ளங்களில் பொங்கி எழ நிலைபெற்று விளங்கும சீர்த்தியைக் கொண்ட சண்பையாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை அந்தத் தொண்டர் கள அழைத்துக் கொண்டு வேதாரணியேசுவரருடைய திருககோயிலுக்குள் நுழைந் தார்கள். பாடல் வருமாறு:

'பொன்னிதழிக் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு சென்னியர் திருவெண் காட்டுத்

திருத்தொண்டர் எதிரே சென்றங் கின்னதன் மையர்க ளானார்

எனவொனா மகிழ்ச்சி பொங்க மன்னுசீர்ச் சண்பை ஆளும்

மன்னரைக் கொண்டு புக்கார்.'