பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெரிய புராண விளக்கம்- 6

வற்றிலும். தகட்டு-வெள்ளித் தகடுகளைப் போன்ற, ஒருமை பன்மை மயக்கம். வரால்-வரால் மீன்கள் துள்ளிக் குதிக்கும். கரும்பு-அந்தத் திருவாய்மூரில் உள்ள வயல்களில் வளர்ந்து நிற்கும் கரும்புச் செடிகள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றிலும். கண்-அந்தக் கரும்புச் செடிகளில் உள்ள கரும்புகளில் இருக்கும் கணுக்களிலிருந்து ஒருமை பன்மை மயக்கம். பொழி-சொரியும். தேன்-தேனைக் காணலாம். பால்-அந்தத் திருவாய்மூரினுடைய பக்கங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றிலும் உள்ள வயல்களில். கதிர்-கதிர்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சாலி-நெற்பயிர்கள் வளர்ந்து நிற்கும். பரப்பு-அந்தப் பரவிய நிலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்.எல்லாவற்றிலும், குலை-குலைகளாகக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி, கமுகு - பாக்கு மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். கால்-அந்தத்திருவாய்மூரில் உள்ள வயல்களை உழவர்கள் ஏர் களால் உழுத சுவடுகள்; ஒருமை பன்மை மயக்கம். எல் லாம்-எல்லாவற்றிலும். தரள-சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த

முத்துக்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். நிரைவரிசை ஒளியை வீசிக்கொண்டு விளங்கும். தடம்-அந்த ஊரில் உள்ள தடாகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல் லாம்-எல்லாவற்றிலும், செங்கழுநீா-செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மேல்-மேலே உள்ள ஆகாயம். எல்லாம்-முழுவதிலும், அகில்-திருவாய் மூரில் வாழும் பெண்மணிகள் தென்பெண்ணையாற்றில் நீராடிவிட்டுத் தங்களுடைய கூந்தல்களை உலர்த்துவதற் காக நெருப்பில் இட்ட அகில் மரங்களினுடைய கட்டைகளி விருந்து எழுந்த ஒருமை பன்மை மயக்கம். தாடம்-புகை போய் அடையும். திருந்து.திருத்தமாகக் கட்டப் பெற்ற. மனை எல்லாம்-திருமாளிகைகள் எல்லாவற்றிலும்; ஒருமை