பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 275,

மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும்: மீன்தாழ்சடையொடு நின்றாடும் ஐயன் திருகடம் எதிர்கும் பிடும்அவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.”

கையும்-திருநாவுக்கரசு நாயனார் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப்பெருமானாருடைய திருநடனத்தைத் தரிசித்த சமயத்தில் அந்த நாயனாருடைய கைகளும்: ஒருமை பன்மை மயக்கம். தலைமிசை-அவருடைய தலை: வின்மேல். புனை-அணிந்துகொண்ட. அஞ்சலியன-அஞ். சலியாகக் கூம்பிக் கும்பிட்டுக்கொண்டு விளங்கின. கண் ணும்-அவருடைய திருவிழிகளும்; ஒருமை பன்மை மயக்கம். பொழி-சொரிந்த. மழை-மழையைப் போல. ஒழியாதுஇடைவிடாமல். ஏ: அசைநிலை.பெய்யும்-பொழியும். தகை பன-தன்மையை உடையவையாக விளங்கின. கரணங் . களும்-அவருடைய அகக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவையும், புறக்கரண்ங்களாகிய அவருடைய திருமேனியில் உள்ள எல்லா உறுப்புக்களும். உடன்-ஒன்று சேர்ந்து. உருகும்-உருக்கத்தை அடையும். பரிவின-அன்பை உடையவையாகத் திகழ்ந்தன. பேறுஇத்தகைய பாக்கியத்தை. எய்தும்-அடையும். மெய்யும்அவருடைய திருமேனியும். தரைமிசை-தரையின் மேல். விழும்-விழுவதற்கு. முன்பு-முன்னால். எழு தரும்-எழுந்து நிற்கும். மின்-மின்னலைப் போல. தாழ்-தொங்கும். சடையொடு-தன்னுடைய தலையின்மேல் உள்ள சடா பாரத்தோடு. நின்று-அந்தத் திருச்சிற்றம்பலத்தில் நின்று. கொண்டு. ஆடும்-திரு நடனத்தைப் புரிந்தருளும். ஐயன்ஐயனாகிய நடராஜப் பெருமானுடைய. திரு.அழகிய. நடம்திருநடனத்தை. எதிர்-தம்முடைய எதிரில், கும்பிடும்தரிசித்துத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக்கொண்டு கூப்பிக் கும்பிடும். அவர்.அந்த.