278 பெரிய புராண விளக்கம்- பி.
துஞ்சடை இருள்கி ழியத்
துளங்கெரி ஆடு மாறே. * அந்த நாயனார் சிதம்பரத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: - . . .
- * பாளை யுடைக்கமு கோங்கிப்பன்
மாடம் நெருங்கி எங்கும் வாளை யுடைப்புனல் வந்தெறி
வாழ்வயல் தில்லை தன்னுள் ஆள உடைக்கழற் சிற்றம்பலத்தரன்
ஆடல் கண்டால் பிளை யுடைக்கண்க ளாற்பின்னைப்
பேய்த் தொண்டர் காண்பதென்னே. அடுத்து வரும் 169-ஆம் கவியின் கருத்து வருமாறு:
பத்தனாய்ப் பாட மாட்டேன்’ எனஅந்த நடராஜம் பெருமானாருடைய சந்நிதியில் தொடங்கிக் கொல்லிப்பண் அமைய, "அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே என முடித்து இந்த வகையில் அந்த நடராஜ்ப் பெருமானாரை வாழ்த்தி வணங்கி நின்று கொண்டே இனிய சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளைப் பெற்ற: செந்தமிழ் மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை அந்தத். திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி, தம்முடைய திருக் கரங்களால் உழவாரத் திருத்தொண்டினைப் புரியும் விருப் பத்தோடு அந்த நடராஜப் பெருமானாரை வணங்கிவிட்டுத் தம்முடைய திருமடத்திற்கு அந்த நாய னார் எழுந்: தருளினார். பாடல் வருமாறு: . * பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்றுமுன் எடுத்துப் பண்ணால் அத்தாவின் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறென். றித்திறம் போற்றி கின்றே
இன்றமிழ் மாலை பாடிக்