பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் zss

யாரைப் போன்றவராகிய அந்த அகிலேசுவரர்: உவம ஆகுபெயர். கோ யி ல் . எழுந்தருளியிருக்கும் திருக். கோயிலுக்கு. அடைந்து - அந்த நாயனார் எழுந்தருளிச் சென்று. அகலுள் - அங்கே வைத்திருந்த அகல்களுக்கு. உள்ளே ஒருமை பன்மை மயக்கம். முந்நீர் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களைப் பெற்ற ச முத் தி ர ம் கு ழ் ந் த. உலகம் - இந்தப் பூ. மண்டலத்தில் வா ழு ம் ம க்க ள் இட ஆகு பெயர். அதிசயிப்பு - வியப்பை அடையுமாறு. முறுக்கும் - முறுக்கிச் செய்யும். திரிமேல் விளக்குத் திரிகளின் மேல்; ஒருமை. பன்மை மயக்கம், நீர் - தாம் கொண்டு வந்திருந்த, புனலை. வார்த்தார் - அந்த நாயனார் பெய்தார். -

பிறகு வரும் 14-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

அந்த நமிநந்தியடிகள் நாயனார் ஒளியை வீசும் திருவிளக்கு ஒன்றை ஏற்றி வைத்தவுடன் அது ஒளியை வெளியிட்டு எழுந்து விளங்கியது; அந்த விளக்கைப் பார்த்து எல்லாத் தேவர்களுக்கும் ஆதி முதல்வராகிய திருவாரூர் அரநெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி பிருக்கும் அகிலேசுவரருடைய திருக்கோயில் முழுவதும் திருவிளக்குக்களை ஏற்றி வைத்து விட்டு, தமக்குத், துன்பத்தைச் செய்வதற்கு எண்ணிய அந்த அருகத், பரமேஷ்டியை வணங்கும் சமணருக்கு எதிரில் முதிர்ச்சியை அடைந்து விளங்கும் ஆனந்தத்தோடு தம்முடைய தலை, வராகிய 'அகிலேசுவரர் வழங்கிய திருவருளினால் அந்த நாயனார் திருவிளக்குக்களைப் புனலினால் இந்தச் செந். தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தெரிந்து கொண்டு. வியக்குமாறு எரியுமாறு செய்தார். பாடல் வருமாறு:

1. சோதி விளக்கொன் றேற்றுதலும்

சுடர்விட் டெழுந்த ததுகோக்கி ஆதி முதல்வர் அரனெறியார் - கோயில் அடைய விளக்கேற்றி