பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
தேவர் தம்குழாம் நெருங்கிய வாய்தலில்
திருநாவ லூரார்தம் காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு.
கயிலைவிற் றிருக்கின்ற - - பூவ லம்புதண் புனற்சடை முடியவர் அருளிப்பா டெனப்போற்றி ஏவல் என்றபின் செய்வதொன் றிலாதவர்
பணிந்தெழுந் தெதிரேற்றார்."
ஏற்ற தொண்டரை அண்டர்வெள் ளானையின்
எதிர்வலங்கொண்டேற்ற . நாற்ற டங்கடல் முழக்கென ஐவகை
நாதம்மீ தெழுந்தார்ப்பப் போற்றி வானவர் பூமழை பொழிந்திடப்
போதுவார் உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணை வரை
மனத்தினிற் கொடுசார்ந்தார்."
- சேரர் தம்பிரான் தம்பிரான் தோழர்தம்
செயலறிந்தப்போதே ...' சார நின்றதோர் பரியினை மிசைக்கொண்டு
திருவஞ்சைக் களம்சார்வார் வீர வெண்களிறுகைத்துவிண் மேற்செலும் . மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தோடு
பரியும்முன் செலவிட்டார்.:
விட்ட வெம்பரிச் செவியினிற் புவிமுதல்
வேந்தர் தாம் விதியாலே - - இட்ட மாம்சிவ மந்திரம் ஒதலின்
இருவிசும் பெழப்பாய்ந்து - பெ. புரா - 9 - 3
37