பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 . பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

விட்டனர், குடியிருப்பைச் சேர்ந்த ஆண், பெண், இளை யோர், முதியோர் அனைவரும் வந்து விட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு குளக்கரை அடைவர். அம்பு முனை போலும் வடிவுடையதாய்ப், புரண்டு, புரண்டு திரியும் போது வான் மீன் போல் ஒளி காட்டும் கயல் மீன் கூட்டமும் வில் வடிவில் வரிசை அமைத்துக் கொண்டு கூட்டம் கூட்ட மாய்த் திரியும் இறால் மீன்களும் களித்துக் திரிவது கண்டு: சிறிது நேரம், அக்காட்சியில் களிப்புற்று, பின்னர் உடன் வரும் இளம் பிள்ளைகளோடும், குளத்துள் ஒரு சேர இறங்கி மீன்களை அளைந்து வாரிக்கொண்டு கரையேறி மகிழ்வர்.

மீன் பிடித்தற் பொருட்டு, கூட்டமாகக் குளத்துள் இறங்கி நீரைக் கலக்கிச் சேறாக்கி விடுவர் என்றாலும், குடி நீர் குளத்தில், குடி நீர் கொள்வதல்லது, ஒருவரும் காலிட்ார். தவறி யாரேனும், அறியாது அதிலும் இறங்கி, நீரின் தூய்மையைக் கெடுத்து விடுவாரோ எனும் அச்சத்தால், ஆண்டு முதிர்மையால், குளத்துள் இறங்கியோ, கடல்மேல் சென்றோ மீன் பிடிக்க மாட்டா முதியவர்கள், குடிநீர்க் குளக்கரையில் அமர்ந்து காவல் காத்திருப்பர். அவ்வாறு காவல் காத்திருக்கும் நிலையிலும், கால்மெல்லாம் தொழி லாற்றிய அவர் கைகள் வாளா இராது, மீன் பிடி வலை களைப் பின்னிக் கெண்டிருக்கும்.

அத்தகைய வலைஞர் மனைகளில் தங்குவீரானால்,ஆங்கு: கொழியல் போகக் குற்றி விட்டால் உரச் சத்து அற்றுவிடும் என்பதால் கொழியல் போகாது வெறும் உமி மட்டுமே நீங்கக் குற்றிய அரிசியைக் கஞ்சி போகச் சோறாக்கும் நிலை யிலும் உரச் சத்து அகன்று விடும் என்பதால் சோறாக வடித்துக் கொள்ளாமல், இளகிய வடிவில் துழாவி எடுத்து வாய் அகன்ற தட்டிலே வார்த்துச் சூடு போக ஆற்றிய களியையும், தாம் அரிதின் முயன்று எடுத்த புற்றினுள் பாம்பு குடிபுகக்கண்டு, வெளிப்பட்டு இறகு உதிர்ந்து வீழ்ந்து கிடக்கும் புற்றீசல் குவியலோ என ஐயுறுத்தக்க வடிவுடைய தாகிய செந்நெல்லின் குறுமுளைகளால் ஆன் அடையையும்,