உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

வளை கண்டன்ன வால்உளைப் புரவி
துணை புணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியும் அமையான், செருத்தொலைத்து
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்புசெல் இவுளியொடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில்"

(480–493)

உரை :

மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்—இருண்ட வானத்தின்கண் தோன்றும் முழுத் திங்களைப் போன்ற, ஆடு வண்டு இமிரா—பறந்து திரியும் வண்டுகள் மொய்க்காத, அழல் அவிர் தாமரை—தீயிலே இட்டு ஒளிவிடப் பண்ணிய பொற்றாமரை மலரை, நீடு இரும்பித்தை பொலியச் சூட்டி—நீண்ட கரிய மயிரிடையே அழகு பெறச் சூட்டி, உரவுக் கடல் முகந்த—அழித்தலும், ஆக்கலும் ஆகிய ஆற்றல் மிக்க கடல்நீரை முகந்து கொண்ட, பருவ வானத்து—கோடைக் காலத்துக் கரு மேகத்திலிருந்து, பகல் பெயல் துளியின்—பகற் போதில் பெய்யும் மழைத் துளிகளின் இடையே, மின்னு நிமிர்ந்தாங்கு—மின்னல் தோன்றினாற் போல, புனை இரும் கதுப்பகம் பொலிய—பின்னிவிட்ட கரிய மயிரில் அழகு பெறும்படி, பொன்னின் தொடை அமை மாலை—பொன்னால் செய்து தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையை, விறலியர் மலைய—ஆடு மகளிர் சூடிக் கொள்ள, நூலோர் புகழ்ந்த மாட்சிய—குதிரை நூல் வல்லார் புகழ்ந்த மாண்புடையவாய, மால்கடல் வளை கண்டன்ன—திருமால் பள்ளி கொள்ளும் திருப்பாற் கடலில் தோன்றிய சங்கைக் கண்டாற் போன்ற, வால் உளைப் புரலி—வெள்ளிய பிடரி மயிரை உடைய, குதிரைகள், துணை புணர் தொழில—தன்னோடு