உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கா.கோவிந்தனார்

209


கடுஞ்சூல் மந்தி கவறாங் காவிற் 395
களிறுகத னடக்கிய வெளிறில் கந்தின்
திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்

கொடையும் கோலும் வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில் மிளைசூழ் படப்பை
நீனிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரை பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்

சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின் 405
இழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய

மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ 410
விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்
அவ்வாய் வளர்பிறை சூடிச் செல்வாய்
அந்திவானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் 415
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்துக்

கச்சி யோனே கைவண் தோன்றல் 420
நச்சிச் சென்றோர்க் கேம மாகிய
அளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப

பெரு—14