92.
60.
65.
70.
75.
பெரும் பெயர் முருகன்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்; திருந்துகோல் ஞமன்தன் மெய்யிற் பிரிவித்து
இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்;
ஆஅங்கு-அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமும் மானும் வாளும் செறிஇலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின் இவ்வாறிரு கைக்கொண்டு மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்தன் . பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம்பு
- இகந்தோய்! நின்குணம் எதிர்கொண்டோர்
அறங்கொண்டோர் அல்லதை,
மன்குணம் உடையோர்
மாதவர் வணங்கியோர் அல்லதை, செறுதி நெஞ்சத்துச் சிளம்நீடி னேரும் சேரா அறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத்து அயரியோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்
நின்நிழல்; அன்னேர் அல்லது இன்னேர்
சேர்வார்; ஆதலின், யாஅம் இரப்பவை
80.
பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும், உருள் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே
கடவுள் வாழ்த்து. கடுவன் இளவெயினனுர் பாட்டு.
கண்ணன் நாகனுர் இசை. பண்ணுப் பாலையாழ்.