பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பெரும் பெயர் முருகன்

உலவுகின்றன. இருவகையினரும் முருகனிடத்தில் சிறந்த பக்தி உடையவர்களே. யார் சொல்வது தவறு என்று கூறுவது? எது சரி என்று கிர்த்தாரணம் செய்வது? -

இவ்வாறு ஒரே காலத்தில் கொள்கை வேறுபாடுகள் இருக்கும்போது, நாளடைவில் வேறுபாடு அமைவது வியப்பன்று. அதைக் கண்டு நம் கொள்கைக்கு ஊறுபாடு நேர வழி இல்லை. முருகவேள் திருவடி மலர்களில் வைக்கும் அன்பு குறையுமென்ற அச்சத்துக்கும் இடமில்லை. முருகன் மாறவில்லை. அவனைப் பற்றிய கினைவு, பேச்சு இவையே மாறுகின்றன. இந்தச் சிறிய மாற்றங்களே உணர்வதில் தவறு ஏதும் இல்லை. உணர்ந்து மகிழவும் இடம் உண்டு. பழைய நூல்களைப் படித் துணர்ந்தால் இந்த நிலையில் கிற்க வழி பிறக்கும்.