பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுணரை அழித்த வேல் 39

குலமே நாசமாகிவிட்டது. மாய அவுனருடைய குலம் அத்தனையும் வேரும் வேரடி மண்ணும் இல்லாமலேயே அழிந்துவிட்டது.

அவுணர் அழிவதற் குரியவர். அவர்களுடைய மாயத்தை என்னவென்று சொல்வது! அவர்களுக்குப் புண்ணிய ஜனம் என்ற பெயர் ஒன்று உண்டு. சென்ற இடங்களிலெல்லாம் இதுவரையில் அவர்களுக்கு வெற்றியே கிடைத்து வந்தது. பேராற்றலும் வெற்றியும் எல்லோருக்கும் கிடைத்து விடுமா? ஏதோ முற்பிறப்பில் புண்ணியம் பண்ணினதாலேதான் கிடைத்திருக்க வேண் டும். பூர்வஜன்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் இப் போது சுகமாக இருக்கிருர்கள்' என்றும், போன ஜன் மத்தில் என்ன பாவம் செய்தானே? இப்போது அநுபவிக் கிருன்’ என்றும் நாம் சொல்வதில்லையா? புண்ணிய ஜனம், பாவஜனம் என்று பேசும் இரண்டு பிரிவுகளில் புண்ணிய ஜனம் என்ற பேரை அவுணர்கள் பெற்ருர்கள். பேர் மாத்திரம் அது. அவர்கள் செய்த காரியமோ மகா கொடுரம்.கொல்வதும் கொன்றதை உண்பதுமே அவர்கள் தொழில். உயிர்களே யெல்லாம் கொன்று தின்பவர் களுக்கு உள்ளத்தில் ஈரம் என்ற பண்பு இருக்கவே இடம் இல்லை; கொடுமைதான் @l弘 கொண்டிருக்கும். கொன்று உண்ணுதலை அஞ்சாமல் செய்யும் கொடிய தொழிலையுடைய அவர்களேக் கொல்வதுதான் தருமம். அவர்கள் கொல்வதற் குரியவர்; கொல்லப்படும் தகுதி பெற்றவர். கோடி கோடி உயிர்களைக் கொன்று உண்பதே தொழிலாக உடையவரை அழித்தால் அவர்களால் இனிக் கொல்லப்பட இருக்கும் உயிர்கள். அத்தனையும் பிழைக்கும். ஆகவே மாய அவுணர்களாகிய அவர்கள் அழிந்தது நியாய மானது. அந்த நியாயமான காரியத்தைச் செய்த வேல் முருகன் கையில் இருக்கிறது.