பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்
49
வாழ்த்திப் பாடுவதற்காகக் கூடியிருந்தார்கள். ஆனால், ஷாவோ அவர்களுக்கு அகப்படாமல் எங்கோ சுற்றிக் கொண்டிருந்தார்.
ஷா எப்பொழுதுமே ஆடம்பரத்தை வெறுத்து எளிமையையே விரும்பினார். பெரிய விழாக்களை அவர் விரும்புவது இல்லை. கிறிஸ்துமஸ் விழாவின் ஆடம்பரத்தை அவர் மிகவும் வெறுத்தார்.
கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டத்தின்போது லண்டன் நகரத்தில் இருக்க விரும்பாமல், எங்காவது கிராமத்துக்குச் சென்றுவிடுவார்.
ஷாவின் மனைவி செல்வம் நிறைந்த குடும்பத்திலே பிறந்து வளர்ந்து வந்தவராக இருந்தும், ஷாவைப் போலவே ஆடம்பரத்தை வெறுத்து, எளிமையாக வாழப் பழகிக் கொண்டார். செல்வந்தர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு மற்றவர்கள் ஏமாந்து போகக்கூடாது என்று அறிவுறுத்துகிறார் ஷா.
“ஏழைகள் பல நாட்கள் பாடுபட்டுப் பெறுகின்ற விடுமுறை நாட்களில், ஒரு மணி நேரமோ அல்லது அரை
4