பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெர்னார்ட்ஷாவின்-வாழ்வும்-பணியும் திரும்பிக் கொள்வார் நாடக கலைஞர் இர்விங் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்த சடங்கில் கலந்துகொள்ள வருமாறு ஷாவுக்கு அழைப்பு வந்தது. “எனக்கு அனுப்பிய அழைப்பை திருப்பி அனுப்புகிறேன். இலக்கியத்துக்கு இர்விங் வாழ்வோடு தொடர்பு இல்லாததைப் போலவே, அவருடைய இறப்போடும் எனக்குத் தொடர்பு இல்லை. "இர்விங் வந்தால், ஷேக்ஸ்பியர் தன் சவப்பெட்டியில் திரும்பிக் கொள்வார். அதைப் போலவே, நான் வந்தால் இர்விங்கும் சவப்பெட்டியில் திரும்பிக்கொள்வார்.” என்று எழுதினார் ஷா. (இர்விங்கைப் பிடிக்காமல் முன்னர் தாக்கி எழுதியவர் ஷா). அறுவை நிகழ்ச்சி வயலின் இசைநிகழ்ச்சி ஒன்றுக்குப்போயிருந்தார் ஷா, சிறிது நேரம் இருந்தார். வித்துவானின் இசை நிகழ்ச்சியை ஷா ரசிக்கவில்லை. “வயலின் வித்துவானைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார், நிகழ்ச்சி அமைப்பாளர்.