பக்கம்:பேசாத பேச்சு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித அழைப்பு 73 குவித்து அதன்மேல் ஒர் ஒட்டாஞ் சில்ல்ை வைத்து அதன் எதிரே தன் தலையிலிருந்து ஒரு மயிரை அறுத்துச் சுருட்டி வைத்தாள். அவற்றைக் கண்ணுல் காட்டிய படியே மருண்ட நோக்கோடு விக்கிரமாதித்தனைப் பார்த்துப் புன்னகை பூத்தாள். அப்பால் பல்லக்கேறித் தன் தோழிமாருடன் சென்றுவிட்டாள்.

முதலில் அந்த கங்கையைக் கவனிக்காமல் இளைப் பாறியிருந்த விக்கிரமாதித்தன் சிறிது நேரங் கழித்து அவளேப் பார்த்தான். அவள்தான் அவன் கண்களே இழுத் தாளே முதலில் அவள் ஏதேனும் பூஜை செய்யப் போகிமுளோ என்று நினைத்தான். பூவைக் காலிலே போட்டுக்கொண்டா பூஜை செய்வார்கள் ? ஒட்டாஞ்சில் பூஜைக்கு உபயோகமாகும் பண்டமா? மணலைக் குவிக்கக் காரணம் என்ன? எதற்காக மயிரைச் சுருட்டி வைத் தாள்? பேய் ஒட்ட வந்தவளா? அன்றிப் பித்துப் பிடித்தவளா ? -

அரசனுக்கு ஒன்றும் விளங்கவே இல்லை. இவள் பித்துப் பிடித்தவளாக இருந்தால் கட்டுக் காவல் இல் லாமல் இருப்பாளா? வாய் பேசாமல், பிதற்ருமல் மெளனமாக இருக்க முடியுமா?’ என்று யோசித்தான். 'அருகில் அறிவிற் சிறந்த பட்டி இருக்கும்போது அவனுக்குச் சொல்லாமல் என்ன யோசனை வேண்டியிருக் கிறது!’ என்று நினேந்து, உடனே அவனிடம் எல்லா வற்றையும் சொன்னன். - -

பட்டி கேட்டுப் புன்முறுவல் பூத்தான். உங்களுக்கி . எங்கே போனுலும் இன்ப வாழ்வு காத்திருக்கிறது. அந்தப் பெண் உங்கள்.டத்தில் வைத்திருக்கும் ஆசைய்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/82&oldid=610237" இலிருந்து மீள்விக்கப்பட்டது