பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

படுவதால், உடற்சக்தி பாதிக்கப்பட்டு மலச் சி க்க ல் உண்டாகிறது. மலம் வெளிப்படுத்தப் படுவதற்குத் தேவைப்படும் உந்துதல் உணர்ச்சி தடைப்படுவதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

அடிக்கடி பச்சைத் தண்ணிரோ அல்லது சுடு தண்ணிரோ பருகலாம். எதற்கும் பலன்கிட்டாவிடில், மருத்துவமனைகளே நாடுவதுதான் சாமர்த்தியமாகும்.

கர்ப்பவதிகள் தங்கள் கணவன்மார்களுக்கு வைக்கும் பரீட்சைபோல இப்போது அவர்கள் என்னென்ன பொருள் களையெல்லாமோ விரும்புவார்கள்; அவற்றை-உண்ணத் தக்கதாக இருந்தால்-தட்டாமல் வாங்கிக் கொடுக்கத்தான் வேண்டும். இம்மாதிரிப் போக்கு இம்மாதத்தில்தான் முனைப்பாகும். -

கர்ப்பவதிகள் உணர்ச்சி வசப்படலாகாது! மூன்ரும் மாதத்தில் தலை காணப்படும். விரல்கள் தெரியும், உடல் உருவாகியிருக்கும். சிசுப்பிண்டமாக (embryo) அது தோன்றியிருக்கும். நஞ்சும் தொப்புள் கொடி-நஞ்சுக் கொடியும் தென்படும். இப்போது கரு ஒர் ஆரஞ்சுப் பழத்தின் அளவுடன் காணப்படும். மூன்று அங்குல நீளமும் இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் எடையும் இருக்கும் கரு. மார்பகங்கள் விரிவடைந்து, முலைக் காம்புகளில் புள்ளிவளையங்கள் சுற்றித் தோன் றிக் கறுக்கும். வயிறு இன்னமும் பார்வைக்குத் தட்டுப்படாது பனிநீர் நிரம்பிய பையில் குழவி மிதக்கிறது. கருவிற்கு எவ்வகையான அதிர்ச்சியும் உண்டாகாமல் பாதுகாத்து, பிரசவ காலத்தில் சுயப் பிரசவமாவதற்கு இது வழிவகுத்துக்கொடுக்கவும் எத்தனிக்கின்றது.

குழந்தையின் நாபியிலிருந்து கர்ப்பப்பையின் சுவருக்கு தொப்புள் கொடி பிணக்கப்பட்டிருக்கிற்