பக்கம்:பொங்கற்பரிசு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வா அண்ணே வா !


ண்ணாம் சிலையோடிக் காதைத் துளைத்துவரப்
பண்ணோ(டு) இழையுமே பாதமலர்!-பெண்ணாள்நம்
பொங்கலை வாழ்த்தும் புதுமையினைக் காணநீ
இங்கெழுந்து வா அண்ணே வா! 1


நன்செய் பழுக்காற் காபழுக்கச் செங்கதிரோன்
புன்செய் பழுக்கப் புறப்பட்டான்!-இன்சொல்
தமிழால் கதிர்வாழ்த்தித் தைவாழ்த்திப் பொங்கல்
அமிழ்துண்போம் வா அண்ணே வா! 2


சின்னக் கரும்பு கணுக்கரும்பைத் துண்டாக்கித்
தின்னும் கதிர்வாழ்த்தும் தாயோடு - பொன்னான
செம்பரிதி வாழ்த்தித்தைத் தீம்பொங்கல் உண்டாக்கும்
நம்பொங்கல் வா அண்ணே வா! 3


நீலக் கடலும் நெடுவானும் பொன்னக்கிக்
கோலம் புகுந்தான் குளிர்பரிதி ! -ஏலவே
புத்தம் புதுப்பொங்கல் தைப்பொங்கல் உண்டாடி
இத்திங்கள் போலிருப் போம்! 4

23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/31&oldid=1146748" இலிருந்து மீள்விக்கப்பட்டது