பக்கம்:பொங்கற்பரிசு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூத்தது வாழ்வு!


பொதுவிடம் இல்லம் வயல்வெளி
தோப்புப் புறங்களெல்லாம்
இதுநாள் வரையில் இருந்த
பகையாம் குளிரிருட்டின்
முதுகை ஒடித்து முழக்கும்
கடலின் விசும்பினின்று
புதுமலர் பொன்மலர் பொற்றா
மரைமலர் பூத்ததுவே !
1


பூத்தது நெற்கதிர்! பூத்தது
வாழ்வு! புதரிலெங்கும்
பூத்தது கண்டோம் தமிழர்
திருநாள் தமிழகத்தில்!
பூத்தது நீர்நிலை! பூத்தது
பொங்கல்! நலம்பலவும்
பூத்தது! வாழ்க! புதுப்பொங்கல்
வாழிய! வாழியவே!
2


வெண்ணெல் அரிசி புதுப்புனல்
ஆப்பால் மணப்பொடிகள்
உண்ணத் தெவிட்டா உயர்கழை
வெல்லம் உடன்கலந்தே
எண்ணம் இனிக்க இனிக்க
எழுந்தநற் பொங்லோசை
விண்ணில் அதிர, அதிரும்
தமிழ்ப்பெண்டிர் மென்சிலம்பே!
3

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/44&oldid=1147582" இலிருந்து மீள்விக்கப்பட்டது