பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிகாரம் ஏழு முறை ஒலித்தது. மீனுட்சி வந்தாள். கையில் இரண்டு செட் ஹார்லிக்ஸ் பானம் இருந்தது. 'மஞ்சு, உன் அன்பு அத்தானுக்கு ஹார் விக்ஸை கொடேன்’ என்றுள். அம்மாவின் உள்நோக்கம் மஞ்சுளாவுக்குப் புரிந்தது, *இதோ, கொடுக்கிறேன், அம்மா,’ என்று சோல்லி, அம்மா வின் கையிலிருந்த ஒரு செட் ஹார்லிக்ஸை வாங்கிக் கொண்டு அேத்தான், இந்தாங்க!" என்று நீட்டினுள், மஞ்சுளா நீட்டிய பானத்தைக் கைநீட்டி வாங்க முனேந்த ஞானசேகர், காற்றில் பறந்து வந்த காகிதமொன்று காவில் படவே, அதை எடுக்கக் குனிந்து நிமிர்ந்த போது, அதே காற்றின் குறும்புத்தனம் காரணமாக மஞ்சுளாவின் மேல்ாக்கு புடவைப் பகுதி இடுப்புக்கு இறங்கிவிட்ட காட்சியைக் கண்டு ஒர் அரைக்கணம் மோகக் கிளர்ச்சி அடைந்தான், ஊம், வாங்கிக்கங்க,: என்று மீண்டும் நினைப்பூட்டிய குரலின் அழுத் தமும் அவனது நெளுசில் உறைக்காமல் இல்லை, ஆகவே, பானத்தை வாங்கினன் அவன். - மாரகச்சேலையை ஒழுங்கு டுத்திகுள் மஞசுளா, அலட் சியமாகப் பத்திரிகையை மடியில் போட்டுக் கொண்ட ஞான. சேகரின் போக்கிலிருந்து அந்தச் செய்தி இன்னமும் அத்தா னின் பார்வைக்கு இலக்காகவில்லை என்ற உண்மை நிலையை உணர்ந்தாள் மஞசுள. அத்தானின் ஆர்வத்தைத் தூண்டி விட்ட அந்தத்தாள் மீது அவள் கவனம் சென்றது. என்ன காகிதம் அது? புரட்டிய காகிதத்தை நான்காக மடித்துக் கொண்டே, பான்த்தைப் பருகத் தொடங்கிய காட்சியைக் கண். டாள். அவள். இந்த ஹார்லிக்ஸ் உனக்கு, வாங்கிக் கொள் மஞ்சு, என்ற அன்னையின் குரலுக்குக் கட்டுப்பட்டாள். மஞ்சுளா, விரல் பதமாக சூடு இருக்கவே, மடக்கென்று குடிக்கலாஞள். அத்தானின் வரவு காரணகாரியமில்லாமல் இருக்கமாட்டாதே; அப்பாவின் எதிர்காலம் என்ன ஆகப்போ கிறதோ என்ற தவிப்பும் கூட்டுச் சேர்ந்தது.