பக்கம்:பொன் விலங்கு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 பொன் விலங்கு

கண்ணாயிரம் கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு சிகரெட் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினார். மூன்றாம் மனிதரோடு கோபமாகவும் பரபரப்பாகவும் இரைந்துகொண்டே அப்பா உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் பல்லாங்குழியில் சோழிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கூடத்திலிருந்து உள்ளே போய் விட்டார்கள். 'ஊரிலிருந்து வந்திருக்கிற பிள்ளையைவந்ததும்-வராததுமாக இவர் எதற்காகக் கோபித்துக் கொள்கிறார்?" என்று அறிந்துகொள்ளும் ஆவலில் நிலைப் படியோரம் சாய்ந்தாற்போல் தளர்ந்து நின்ற அம்மாவும் கண்ணாயிரம் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து புகைக்கத் தொடங்கியதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள். தந்தையின் கூப்பாடு நிற்காமல் தொடர்ந்தது. அவர் தம் மகனைக் கண்டபடி பேசி இரைகின்ற காட்சியைக் கண்ணெதிரே பார்த்து இரசிக்கின்றவரைப் டோல் கண்ணாயிரம் திமிராகவும் அலட்சியமாகவும் சிகரெட் சாம்பலை உதறி உதறிப் புகையை உறிஞ்சி விட்டுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி இன்னொருத்தருக்கு முன்னால் தந்தையை எதிர்த்துப் பேச நேர்கிற அநாகரிகத்தை விரும்பாமல் கையிலிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.

'என்னடா.லீவுக்கு வரமாட்டேன்னு சொன்னவன் திடீர்னு புறப்பட்டுவந்திருக்கியேன்னு பார்த்தேன். இதுக்குத்தான் புறப்பட்டு வந்தியா?... எல்லாம் கண்ணாயிரம் இப்போதுதான் எனக்குச் சொன்னார். மல்லிகைப் பந்தல் வேலைக்காக இன்டர்வ்யூவுக்கு அலைந்துவிட்டுத் திரும்பி வந்தபோதே நீ நாட்டியக்காரப் பெண்ணோடுதான் இரயிலிலிருந்து இறங்கினாயாம். இந்தப் பழக்கம் எல்லாம் கொஞ்சம்கூட நல்லதில்லே. வீணாக புத்திகெட்டுப்போய் அலையாதே. ஊரிலிருந்து வந்தவன் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்காமல் நேரே ஆஸ்பத்திரிக்கு ஒடிப்போய் அவளைப் பார்த்து உருகணும்னா உனக்கு எவ்வளவு புத்தித் தடுமாறி நீ மயங்கிப் போயிருக்கணும்? நீ இப்படி அந்த நாட்டியக்காரப் பெண்ணிடம் பைத்தியம் பிடிச்சுப்போய் அலையறது தெரிந்தால் ஊர் சிரிக்கும். குடும்பப் பெயரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/424&oldid=595668" இலிருந்து மீள்விக்கப்பட்டது